19-வது ஆண்டு சுனாமி நினைவு தினம் இன்று!

Date:

2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி இலங்கை உட்பட பல நாடுகளை பாதித்த சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் (26) 19 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

19 ஆண்டுகளுக்கு முன்பு, டிசம்பர் 26, 2004 அன்று, கிருஸ்தவ மக்கள் அற்புதமான கிறிஸ்மஸ் தினத்தை கொண்டாடிக்கொண்டிருந்தனர். தெற்கு மற்றும் வடகிழக்கு கடற்கரை பகுதி மக்கள் தங்களது அன்றாட நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.

அன்றைய தினம் உந்துவப் பௌர்ணமி தினம் என்பதால் பௌத்த பிக்குகள் பலர் சமயச் சடங்குகளில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களுக்கு இடையே அமைந்துள்ள இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவு அருகே உள்ள கடற்பரப்பில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.

உள்ளூர் நேரப்படி காலை 6:58 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து எழுந்த அலைகள் முதலில் இந்தோனேசியாவைத் தாக்கியது.

அதனைத் தொடர்ந்து சில மணித்தியாலங்களில் மணிக்கு 800 கிலோமீற்றர் வேகத்தில் இலங்கையின் கரையோரப் பகுதியைத் தாக்கிய கடல் அலைகள் 40,000க்கும் அதிகமான இலங்கையர்களின் உயிர்களைப் பலிகொண்டன.

இதேவேளை, உலகின் மிக மோசமான ரயில் விபத்து ஹிக்கடுவ, பரேலியா பகுதியில் இருந்து பதிவாகியுள்ளது.

சுமார் 1500 பயணிகளை ஏற்றிக்கொண்டு காலை 6.40 மணியளவில் மருதானையிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த 50ம் இலக்க புகையிரதமே இந்த பயங்கர விபத்தை சந்தித்துள்ளது.

சுனாமி அலைகள் இலங்கை மற்றும் பல ஆசிய நாடுகளை தாக்கியது, 3 லட்சத்திற்கும் அதிகமான விலைமதிப்பற்ற உயிர்களை இழந்தது.

இந்த அனர்த்தம் ஏற்பட்டு 19 வருடங்கள் கடந்துள்ள போதிலும், எம்மை விட்டு பிரிந்த உறவினர்கள், நண்பர்கள் இன்றும் எம் நெஞ்சில் அழியாத நினைவுகளை விட்டுச் சென்றுள்ளனர்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...