2022 தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளுக்காக காத்தான்குடி நகர சபைக்கு 2ஆவது இடம்!

Date:

தேசிய நூலக ஆவணவாக்கல் சபையினால் 2022 ஆம் ஆண்டில் நடாத்தப்பட்ட தேசிய வாசிப்பு மாத நிகழ்வில் நகர சபைகளிற்கான பிரிவில் காத்தான்குடி நகர சபைக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.

இரண்டு மாதங்களாக காத்தான்குடி பொது நூலகத்தினால் ஏகப்பட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் மாணவர்களை நூலகத்துடன் இணைக்கும் பாரிய பணி மேற்கொள்ளப்பட்டது.

மாணவர்களுக்கான விவாதப் போட்டி, அறபு எழுத்தணிப் போட்டி, அதான் சொல்லல் போட்டி, அறபு வாசிப்புப் போட்டி, நாடகப் போட்டி, வில்லுப்பாட்டு நிகழ்ச்சி, மாணவர் பொழுதுபோக்கு நிகழ்ச்சி, சிறுகதைப் போட்டி, கவிதைப் போட்டி, சிறந்த வாசகரைத் தெரிவு செய்யும் போட்டி, சிறுவர் ஆக்கத்திறன், கலைத்திறனை வெளிக்கொணரும் கண்காட்சி, கட்டுரைப் போட்டி, அறிவுக்களஞ்சிய போட்டி, 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பாடல் போட்டி, சிங்கள வாசிப்பு போட்டி, தமிழ் மற்றும் ஆங்கில வாசிப்புப் போட்டி, சிறந்த வீட்டு நூலகம் என பல நிகழ்வுகளை சிறப்புடன் நடாத்தியிருந்தார்கள்.

இதற்காக பெரிதும் பாடுபட்டவர் காத்தான்குடி நகரசபையின் செயலாளர் ரிப்கா ரபீக் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வாழைச்சேனை பேத்தாழை பொது நூலகம் பிரதேச சபை மட்டத்தில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...