24 மணிநேரத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது!

Date:

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 2,296 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 24 மணி நேரத்திலே குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவைச் சேர்ந்த 109 சந்தேக நபர்களிடம் தடுப்புக்காவல் உத்தரவின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், 14 சந்தேக நபர்களுக்கு எதிராக குற்ற விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 184 பேர் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

மேலும், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விஷேட பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 218 சந்தேக நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையில் ஒரு கிலோகிராம் ஹீரோயின் மற்றும் 19,507 போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப்பொருட்களை கைப்பற்றப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...