அகதிகள் முகாமை குறிவைத்து குண்டுவீச்சு: மத்திய காசாவிலும் தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல்!

Date:

தற்போது மத்திய காசாவிலும் இஸ்ரேல் இராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

பலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் 2 மாதங்களுக்கு மேல் நீடித்து கொண்டிருக்கிறது.

போர் விமானங்கள் மூலம் குண்டுவீச்சு மற்றும் ஏவுகணை வீச்சு நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் காசாவுக்குள் இஸ்ரேல் தரைப்படையும் தாக்குதல் நடத்துகிறது. முதலில் வடக்கு காசாவில் தாக்குதலை நடத்தி வந்த இஸ்ரேல், அதன்பின் தனது தாக்குதலை விரிவுபடுத்தியது. மத்திய, தெற்கு, காசாவிலும் குண்டுகள் வீசப்படுகிறது.

இஸ்ரேல் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், அப்பாவி பொதுமக்கள் என பலியானவர்கள் எண்ணிக்கை 21 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. காசா முனை பகுதி முழுவதும் தொடர்ந்து தாக்குதல் நடந்து வருவதால் மக்கள் உயிர் பயத்தில் இருக்கிறார்கள்.

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 241 பேர் உயிரிழந்துள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மத்திய காசாவிலும் இஸ்ரேல் இராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

மத்திய காசா பகுதியில் மக்கள் தொகை அதிகம் உள்ள நகர்ப்புற அகதிகள் முகாம்களில் தரைவழி தாக்குதல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் அங்கு தொடர்ந்து குண்டுகள் வீசப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு, தெற்கு காசாவை தொடர்ந்து மத்திய காசாவிலும் தரைவழி தாக்குதல் விரிவுப்படுத்தப்பட்டுள்ளதால் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது.

இதற்கிடையே இஸ்ரேல் ராணுவ தலைவர் ஹெர்சி ஹலேவி கூறும்போது, ஹமாஸ் மீதான போர் இன்னும் பல மாதங்களுக்கு நீடிக்கலாம். ஹமாஸ் அமைப்பை தகர்ப்பதில் குறுக்குவழிகள் எதுவும் இல்லை. உறுதியான மற்றும் தொடர்ச்சியான சண்டைகள் மட்டுமே நடக்கின்றன. நாங்கள் ஹமாசின் தலைமையை அழிப்போம். அதற்கு சில மாதங்கள் எடுக்கலாம் என்றார்.

இந்த நிலையில் பலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியிலும் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...