களனிப் பல்கலைக்கழக பீடங்களின் கற்கைகள் இன்று ஆரம்பம்!

Date:

களனிப் பல்கலைக்கழகத்தில் மூடப்பட்ட ஏனைய பீடங்களின் கற்கைகள் இன்று ஆரம்பமாகவுள்ளதுடன் அனைத்து மாணவர்களும் பல்கலைக்கழகத்திற்கு சமூகமளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

களனி பல்கலைக்கழக கற்கைகள் கடந்த 5ஆம் திகதி தற்காலிகமாக மூடப்பட்டன.

எவ்வாறாயினும், கடந்த திங்கட்கிழமை, விஞ்ஞான பீடம், கணினி மற்றும் தொழில்நுட்ப பீடம், வர்த்தக மற்றும் முகாமைத்துவ பீடம் ஆகியவற்றின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க பல்கலைக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்நிலையில், ஏனைய இரண்டு பீடங்களின் கற்கைகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவரைத் தாக்கிய சம்பவத்தினாலேயே பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...