காசா மீது இஸ்ரேல் தனது குண்டுவீச்சை தீவிரப்படுத்தியுள்ளது!

Date:

ஒரு வார கால போர்நிறுத்த ஒப்பந்தம் நிறைவடைந்ததை அடுத்து, காசா மீது இஸ்ரேல் தனது குண்டுவீச்சை தீவிரப்படுத்தியுள்ளது.

பேச்சுவார்த்தைகள் மூலம் போரினை இடைநிறுத்தம் செய்வதற்காக கத்தார் முயற்சித்து வருகிறது.

முற்றுகையிடப்பட்ட பிரதேசத்தில் பாலஸ்தீனியர்கள் “நோய், அழிவு மற்றும் இறப்பு ஆகியவற்றால் சிக்கிக் கொண்டுள்ளனர்” என்று கூறி, ஐ.நா தலைவர் மீண்டும் காஸாவில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

போர் நிறுத்தத்தின் பின்னர் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 178 பேர் பலியாகியுள்ளதாகவும், 589 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

200 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அக்டோபர் 7 முதல், காஸாவில் 15,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் இறப்பு எண்ணிக்கை சுமார் 1,200 ஆகும்.

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நமல் ராஜபக்ஷ வாழ்த்து!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும்,...