குவைத் மன்னர் ஷேக் நவாப் 86 வயதில் காலமானார்!

Date:

குவைத்தின் மன்னர் ஷேக் நவாப் (86) காலமானதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சுமார் 4.2 மில்லியன் மக்கள் வசிக்கும் சிறிய அரேபிய நாடு குவைத். இது உலகில் அறியப்பட்ட 6வது பெரிய எண்ணெய் வள நாடு ஆகும்.

இங்கு, கடந்த 2020ஆம் ஆண்டு சபா அல்-அகமது அல்-ஜாபர் அல்-சபா மறைந்ததைத் தொடர்ந்து, ஷேக் நவாப் அல் அகமது அல் சபா மன்னராக பதவி ஏற்றார்.

குவைத்தின் உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றிய ஷேக் நவாப், சர்ச்சைக்கு இடமில்லாத வகையில் தெரிவானார்.

ஆனால் அவரது வயது காரணமாக குறுகிய காலம் மட்டும் அவரது பதவிக்காலம் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் தனது 86 வயதில் ஷேக் நவாப் உயிரிழந்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது. இதனை அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் பட்டத்து இளவரசராக கருதப்படும் ஷேக் மெஷல் அல் அகமது அல் ஜாபர் (83), குவைத்தில் ஆட்சியராக பதியேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...