கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் பரவும் ஜே.என்.1 தொற்று!

Date:

இந்தியாவில் பல மாநிலங்களில் வேகமாக பரவி வரும் ஜே.என்.1 தொற்று, கோவா, மராட்டியம், கர்நாடகா, தெலுங்கானா, கேரளாவை தொடர்ந்து தமிழகத்திலும் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ஜெ.என்.1 தொற்று உள்ளது என்பதை உறுதிபடுத்தும் மத்திய அரசின் ஆதாரங்கள் எதுவும் இதுவரை எங்களுக்கு கிடைக்கவில்லை என பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் விளக்கம் அளித்து இருந்தார்.

இந்த நிலையில், கோவை புலியங்குளத்தில் காய்ச்சல் பாதிப்பு இருந்த நபரை பரிசோதனை செய்ததில் அவருக்கு ஜே.என்.1 வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜே.என்.1 தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் குணமடைந்ததை அடுத்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அத்துடன் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 529 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,093 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...