சாகரவுக்கு எதிராக புண்ணாக்கு வாளியுடன் போராட்டம் செய்த மக்கள் போராட்ட இயக்கம்!

Date:

நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அலுவலக வளாகத்தில் இன்று மக்கள் போராட்ட இயக்கத்தின் தலைவர் சானக பண்டார உள்ளிட்ட குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்திற்கு எதிராக இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அண்மையில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் சாகர காரியவசம் வெளியிட்ட கருத்திற்கு எதிராக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த குழுவினர் அலுவலகத்திற்குள் பிரவேசிப்பதற்கு பாதுகாப்பு பிரிவினர் சந்தர்ப்பம் வழங்காத நிலையில் வீதியிலே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்கள் புண்ணாக்கு வாளியொன்றை கொண்டுவந்ததுடன், அதனை வீதியில் வைத்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...