சாய்ந்தமருது மதரஸா மாணவன் மரணம்: சிசிடிவி தொழில்நுட்பவியலாளரிடம் வாக்குமூலம்!

Date:

 சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள மதரஸாவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் மரணம் தொடர்பில் அப்பிரதேசத்தை சேர்ந்த சிசிடிவி தொழில்நுட்பவியலாளரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள மத்ரஸா ஒன்றில் கடந்த ஐந்தாம் திகதி இரவு மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டார்.

இதேவேளை மரணம் தொடர்பில் சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டு பொலிஸில் முறைப்பாடளித்ததை தொடர்ந்து மதரஸாவின் நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

அதனை தொடர்ந்து குறித்த மரணமானது கொலை என சிறுவனின் பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...