சாய்ந்தமருது மதரஸா மாணவன் மரணம்: சிசிடிவி தொழில்நுட்பவியலாளரிடம் வாக்குமூலம்!

Date:

 சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள மதரஸாவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் மரணம் தொடர்பில் அப்பிரதேசத்தை சேர்ந்த சிசிடிவி தொழில்நுட்பவியலாளரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள மத்ரஸா ஒன்றில் கடந்த ஐந்தாம் திகதி இரவு மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டார்.

இதேவேளை மரணம் தொடர்பில் சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டு பொலிஸில் முறைப்பாடளித்ததை தொடர்ந்து மதரஸாவின் நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

அதனை தொடர்ந்து குறித்த மரணமானது கொலை என சிறுவனின் பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...