தமிழகத்தில் வடியாத வெள்ளம்; பசியால் வாடும் மக்கள்: நான்காவது நாளாக நிவாரண உதவிகள் வழங்கிய மஜகவினர்!

Date:

மிக்ஜாம் புயல் காரணமாக இந்தியாவில் தமிழகம் முழுவதும் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எப்போதும் போல தமிழ் நாட்டிலுள்ள பல பகுதிகளில் காணப்படுகின்ற மனிதாபிமானமும் மனிதநேயமும் மேலோங்குகின்ற சந்தர்ப்பமாகவே வெள்ள நிவாரணப்பணிகள் அமைகின்றன.

இதன்மூலம் தங்களுடைய சமூக நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் மிக அழகான முறையில் எப்போதும் வெளிப்படுத்திக்காட்டி வருகின்றனர்.

அந்தவகையில் இந்து, முஸ்லிம் மக்கள் நெருக்கமான உறவினையும் அடையாளங்களையும் இதனூடாக தெளிவாக காணக்கூடியதாக உள்ளது.

அதற்கமைய தமிழ்நாட்டில் ஒரு அரசியல் அமைப்பாகவும்   சமூக சேவை அமைப்பாகவும் செயற்படுகின்ற மனித நேய ஜனநாயக் கட்சி முன்னெடுத்து வரும் வெள்ளி நிவாரணப்பணிகள் பாராட்டுக்குறியது.

அதற்கமைய தமிழகத்தில்  மழை பாதிப்பின் தாக்கம் தொடரும் நிலையில், மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நான்காவது நாளான இன்று  நிவாரண பணிகள் தொடர்கிறது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மஜக பேரிடர் மீட்பு மற்றும் நிவாரண குழுவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மஜக-வினர் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர்.
யாரும் உதவி செய்யாத இடங்களாக கேட்டறிந்து அங்கு போய் நிவாரண உதவிகளை செய்கின்றனர்.
அதற்கமைய, இன்றைய தினம் திருவள்ளூர் – மணலி – விச்சூர் பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதியில்,  மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று மதிய உணவுகளை வழங்கினார்.

அதேநேரம் அப்பகுதி மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார். இப்பகுதியில் 1000 இற்கும் மேற்பட்ட மக்களுக்கு மஜக-வினர் மதிய உணவுகளையும், குடிநீர் போத்தல்களையும் வழங்கினர்.

பின்னர் மஜக பேரிடர் மீட்பு மற்றும் நிவாரண குழுவில் இரவு பகல் பாராமல் நிவாரண பணிகளை மேற்கொண்டு வரும் மஜக-வினரை பொதுச்செயலாளர் அவர்கள் நலம் விசாரித்து உற்சாகமூட்டினார்.
#

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...