பில் கேட்ஸுடன் ஜனாதிபதி ரணில் சந்திப்பு

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனருமான பில் கேட்ஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகளின் 28 ஆவது காலநிலை மாற்றங்கள் தொடர்பிலான “COP28” உயர்மட்ட மாநாடு டுபாய் எக்ஸ்போ சிட்டியில் நடைபெற்று வருகிறது.

இந்த மாநாட்டில் 54 அரச தலைவர்களும், உலகளாவிய முக்கிய பிரதிநிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில், “COP28” உச்சி மாநாட்டில் கலந்துகொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பில்லியனர் பில் கேட்ஸுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது, உலகளாவிய சவால்கள் மற்றும் வெப்ப மண்டலத்தில் இலங்கையின் சாத்தியமான தலைமைத்துவம் குறித்து கலந்துரையாடப்படதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...