போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!

Date:

இஸ்ரேலிய தாக்குதல்களிலிருந்து தப்பித்து காசாவின் தெற்கு பகுதி சென்ற கர்ப்பிணிப் பெண்ணொருவர் 4 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதாக பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

28 வயதான இஸ்மான் அல்-மஸ்ரே என்ற பெண்ணே இவ்வாறு 4 குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

அவர் காசா பகுதியின் வடக்குப் பகுதியில் வசித்து வந்த நிலையில் இஸ்ரேலிய தீவிரவாத படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதால், அவர் தனது கணவருடன் தெற்கு காசாவிற்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த கர்ப்பிணிப் பெண் நேற்று முன்தினம் (28-12-2023) 2 பெண் குழந்தைகளையும் 2 ஆண் குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார்.

தெற்கு காசாவில் மருத்துவமனை வசதிகள் காணப்படாத நிலையில் அங்குள்ள ஒரு பாடசாலை கட்டிடத்தில், குறைந்த வசதிகளுடன் இயங்கும் மருத்துவ மையத்திலேயே குறித்த கர்ப்பிணிப் பெண் நான்கு குழந்தைகளையும் பிரசவித்துள்ளார்.

Popular

More like this
Related

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...

கோபா குழுவின் தலைவர் பதவி கபீர் ஹாசிமுக்கு..!

பாராளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவின் (கோபா) (COPA) தலைவர் பதவிக்கு கபீர்...

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...