வட் வரி அதிகரிப்பால் பொருட்களின் விலை 60 வீதம் வரை உயரும் சாத்தியம்

Date:

அரசாங்கம் வற் வரியை 15 வீதத்தில் இருந்து 18 வீதமாக அதிகரிப்பதன் ஊடாக நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு பொருளின் விலையும் 50 முதல் 60 வீதம் வரை அதிகரிக்கும் என இலங்கை ஐக்கிய வர்த்தக மன்றம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட இலங்கை ஐக்கிய வர்த்தக மன்றத்தின் தலைவர் டானியா அபேசுந்தர மேலும் கூறியதாவது,

‘‘அரசாங்கம் வணிகர்களிடம் வரியை வசூலிக்க முறையான திட்டங்களை வகுக்க வேண்டும். வணிகர்களை ஊக்குவிப்பதன் ஊடாகவே நிலையான வரி வருமானத்தை வசூலிப்பதற்கான முறைமைகளை உருவாக்க முடியும்.

கடுமையான நெருக்கடி நேரத்தில் அரசாங்கம் வணிகர்களுக்கு வரி விதிக்க முயற்சித்தால், அவர்கள் எவ்வாறு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவை வழங்க முடியும்.

வற் வரி அதிகரிப்பால் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை நுகர்வோருக்கு போட்டி விலையில் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.‘‘ என்றார்.

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...