விடுமுறையை கொண்டாட வெளிநாடுகளுக்குச் சென்ற 20 பாராளுமன்ற உறுப்பினர்கள்!!

Date:

புத்தாண்டு விடுமுறையை கழிப்பதற்காக 20க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடு சென்றுள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர்களில் பலர் உறவினர்களை சந்திக்கவும், குழந்தைகளின் கல்வியை கவனிக்கவும் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.

வெளிநாடு சென்ற பல பாராளுமன்ற உறுப்பினர்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன் நாடு திரும்ப உள்ளனர்.

இதேவேளை, நுவரெலியாவிலுள்ள சென்பதி நிவேசா பாராளுமன்ற உறுப்பினர்களின் தங்கு விடுதியின் அறைகள் இம்மாதம் 14ஆம் திகதி முதல் ஜனவரி முதலாம் திகதி வரை முழுமையாக பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதிக்குள் நூறு எம்.பி.க்கள் தங்கு விடுதியை முன்பதிவு செய்துள்ளனர்.

வரவு – செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு கடந்த 13ஆம் திகதி நடைபெற்றதையடுத்து, சபாநாயகர் பாராளுமன்றத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் 9ஆம் திகதி வரை ஒத்திவைத்தார். இதனால் எம்.பி.க்கள் அனைவருக்கும் ஒரு மாதம் வரை விடுமுறை கிடைத்துள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...