அரச மருத்துவப் பணியாளர்கள் இன்று வேலை நிறுத்தத்தில்!

Date:

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (09) காலை 08.00 மணிக்கு அரச வைத்தியசாலைகளில் மருத்துவப் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

வைத்தியர்களின் சில கொடுப்பனவுகளை உயர்த்தும் தீர்மானத்திற்கு எதிராகவும் மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

வைத்தியர்களுக்கான Disturbance, Availability & Transport (DAT) கொடுப்பனவை இரட்டிப்பாக்க ஜனாதிபதியினால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு நேற்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி, (DAT) கொடுப்பனவை ரூ.35,000 வில் இருந்து 70,000 ரூபாவாக அதிகரிக்கவும், பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் ஆய்வுக் கொடுப்பனவை 25% இனால் அதிகரித்து ஜனவரி மாத சம்பளத்துடன் வழங்கவும் ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

Popular

More like this
Related

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...

‘மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்’: புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பிலான முக்கிய கருத்தரங்கு!

''மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்'' என்ற தலைப்பிலான கருத்தரங்கு எதிர்வரும்...

வளிமண்டலத்தில் மாற்றம்; நாடு முழுவதும் மழை

இன்றையதினம் (15) நாட்டின் அயன இடை ஒருங்கல் வலயம் (Intertropical Convergence...

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...