வட காஸாவுக்கான மருத்துவ உதவிகளை நிறுத்தியது உலக சுகாதார நிறுவனம்!

Date:

வடகாஸாவுக்குள் மருத்துவ உதவிகளை அனுப்பவிருந்த உலகச் சுகாதார நிறுவனம் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரப்படாத காரணத்தால் அதை நிறுத்தியுள்ளது.

அந்த மருத்துவ பொருட்கள் அல்அவ்தா மருத்துவமனைக்கும், மற்றொரு மருந்தகத்திற்கும் கொண்டு செல்ல இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வடகாஸாவுக்குள் மருத்துவ உதவிகளைக் கொண்டு செல்ல முடியாமல் போவது இது நான்காவது முறையாகும். வடகாஸாவுக்கு உதவிகள் சென்று 12 நாட்கள் ஆகிறது.

கடுமையான வெடிகுண்டுத் தாக்குதல்கள், நடமாட்டக் கட்டுப்பாடு ஆகியவற்றுடன் தெளிவான தகவல்கள் இல்லாத காரணத்தால் ஊழியர்களின் பாதுகாப்புக் கருதி இந்த முடிவை எடுத்ததாக உலக சுகாதார நிறுவனம்  தகவல் வெளியிட்டது.

5 மருத்துவமனைகளுக்குத் தேவையான மருத்துவப் பொருட்களை ஜனவரி 7ஆம் திகதி அனுப்ப திட்டமிடப்பட்டதாக நிறுவனம் தெரிவித்தது.

சரியான நேரத்திற்கு மருத்துவ உதவிகள் கிடைக்காவிட்டால் வடகாஸாவில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.

காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் செய்வது அறியாது பொதுமக்கள் கலங்கி நிற்கின்றனர்.

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நமல் ராஜபக்ஷ வாழ்த்து!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும்,...