வீதி ஒழுங்கு விதிகளை மீறுகின்ற வாகன சாரதிகள் இனி சி.சி.டி.வியில் கண்காணிக்கப்படுவார்கள் என பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது அதிகமான விபத்துக்கள் மற்றும் விதி மீறல்கள் இடம்பெறுவதால் அதை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விதிகளை மீறுகின்ற சாரதிகளுக்கான அபராத சீட்டு, அந்தந்த வாகன உரிமையாளரின் பிரதேச பொலிஸ் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 22ஆம் திகதி முதல் இது நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.