உச்சம் தொட்ட தேங்காய் விலை: மோசமான வானிலையால் தென்னை அறுவடை குறைந்துள்ளது

Date:

இலங்கையில் கடந்த சில நாட்களாக தேங்காய் விலை அதிகரித்து வருவதாக தெங்கு விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

”தென்னை அபிவிருத்திச் சபையின் கூற்றுப்படி, ஆண்டு முழுவதும் சுமார் 1500 மி.மீ மழைவீழ்ச்சியும், சுமார் 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் தென்னை அறுவடைக்கு தேவை.

ஆனால், கடந்த சில மாதங்களாக நாட்டின் பல பகுதிகளில் கனமழையும், சில பகுதிகளில் மிகவும் வறண்ட வானிலையும் காணப்பட்டது. மோசமான வானிலையால் தென்னை அறுவடை குறைந்துள்ளது.

அறுவடை குறைந்துள்ளமையால் தேங்காய் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. எதிர்வரும் மே மாதத்திற்குள் படிப்படியாக இந்த நிலை சீராகும் என தென்னை விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தேங்காய் அறுவடை குறைந்துள்ளமையால் சந்தையில் தேங்காய்க்கான கேள்வி அதிகரித்துள்ளது. இதனால் 70, 80 ரூபாவாக இருந்த சிறிய தேங்காய் ஒன்றின் விலை தற்போது 100 ரூபாவை எட்டியுள்ளது.

100 ரூபா அல்லது அதற்கு மேலதிகமாக விற்பனை செய்யப்பட்ட பெரிய தேங்காய் ஒன்றின் விலை தற்போது 120 ரூபாவை தாண்டியுள்ளது. எதிர்காலத்தில் இதனையும் விட விலைகளில் அதிகரிப்பு ஏற்படும் என தென்னை விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Popular

More like this
Related

ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி...

புத்தளத்தில் ‘அத்தம’ தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு!

பண்டைய இலங்கையில் நிலவிய பரஸ்பர உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக்...

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைமையகத்திற்கு பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழக பிரதிநிதிகள் வருகை!

பங்களாதேஷின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUC) பொருளாளர் பேராசிரியர் கலாநிதி மஹ்பூபுர்...

2026 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நாளை

2026 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை இடம்பெறவுள்ளது....