இன்னும் 500 பேருக்கு ஹஜ் வாய்ப்பு: திணைக்களம் தெரிவிப்பு

Date:

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், இலங்கை ஹஜ் குழுவுடன் இணைந்து 2024 ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையினை நிறைவேற்ற உத்தேசித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோரியிருந்தது.

அதற்கமைய இந்த ஆண்டு 3500 வீசாக்கள் கிடைக்கப்பெற்றதுடன் இந்த வீசாக்களை 2024 ஏப்ரல் மாதத்திற்குள் பூரணப்படுத்துமாறு சவூதி அரசு இலங்கை ஹஜ் குழுவை பணித்துள்ளது.

இதனடிப்படையில் இதுவரை 3000 பேர் திணைக்களத்தில் பதிவு செய்துள்ளனர்.
இன்னும் 500 பேருக்கான பதிவே எஞ்சியுள்ளதால் 2024 ஆம் ஆண்டு ஹஜ் கடமையினை நிறைவேற்ற உத்தேசித்துள்ளவர்கள் உடனடியாக தங்களது பதிவை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள இணையத்தளத்தினூடாக (online) மூலம் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...