இலங்கையில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் IIT Madras!

Date:

இந்தியாவின் முதன்மையான பொறியியல் கல்லூரிகளில் ஒன்றான இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT Madras) இந்த ஆண்டு இலங்கையின் கண்டியில் தமது கிளை வளாகத்தைத் திறக்க உள்ளது.

வெளிநாடுகளில் IIT யின் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக இந்த செயல்பாடு இருக்கும். புதிய வளாகத்திற்கான முன்மொழிவு கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்றதுடன், இதற்கான நிதி ஒதுக்கீடுகளும் இடம்பெற்றுள்ளன.

ஐஐடி தமது கல்வியாளர்கள் குழுவை விரைவில் இலங்கைக்கு அனுப்ப உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

வளாகத்தை அமைப்பது தொடர்பான கலந்துரையாடலுக்காக அடுத்த மாதம் ஐஐடி இலங்கை வரவுள்ளது. இதற்கு முன்னர் இலங்கைப் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு செல்ல உள்ளனர்.

இலங்கை விஜயத்தில் ஐஐடி குழுபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு (யுஜிசி) அதன் பாடநெறிகள் குறித்து விளக்கமளிக்கும். அதன் பின்னர் கண்டி கிளை வளாகத்தை நிறுவுவதற்கான செயல்முறையைத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...