இஸ்லாமிய ஐக்கியப் பேரவையின் சிரேஷ்ட ஆலோசகர்களாக ஹுஸைன் முஹம்மத் மற்றும் நகீப் மௌலானா நியமனம்!

Date:

இலங்கையில் இயங்கும் இஸ்லாமிய அமைப்புக்களை ஒரே குடையின் கீழ் இணைப்பதற்கான இஸ்லாமிய ஐக்கியப் பேரவையின் சிரேஷ்ட ஆலோசகர்களாக முன்னாள் சபாநாயகர் மர்ஹூம் அல்-ஹாஜ் எம்.எச். முஹம்மதின் புதல்வரும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய நிலையத்தின் தலைவருமான அல்-ஹாஜ் ஹுஸைன் முஹம்மத், மற்றும் முன்னாள் மேல்மாகாண ஆளுநர் மர்ஹும் அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யித் அலவி மௌலானாவின் புதல்வரும் அகில இலங்கை சூபி தரீக்காக்களின் உயர்பீடத்தின் (SCOT) தலைவருமான அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யித் நகீப் மௌலானா ஆகியோர் நியமிக்கப்பட்டிருப்பதாக இஸ்லாமிய ஐக்கியப் பேரவை அறிவித்துள்ளது.

கடந்த மாதம் நடைபெற்ற இஸ்லாமிய ஐக்கியப் பேரவையின் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக பேரவையின் நிர்வாக அதிகாரி பியாஸ் முஹம்மத் தெரிவித்தார்.

இஸ்லாமிய ஐக்கியப் பேரவையில் இலங்கையில் இயங்குகின்ற 29 இஸ்லாமிய அமைப்புக்கள் அங்கம் வகிக்கின்றன.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...