இஸ்லாமிய ஐக்கியப் பேரவையின் சிரேஷ்ட ஆலோசகர்களாக ஹுஸைன் முஹம்மத் மற்றும் நகீப் மௌலானா நியமனம்!

Date:

இலங்கையில் இயங்கும் இஸ்லாமிய அமைப்புக்களை ஒரே குடையின் கீழ் இணைப்பதற்கான இஸ்லாமிய ஐக்கியப் பேரவையின் சிரேஷ்ட ஆலோசகர்களாக முன்னாள் சபாநாயகர் மர்ஹூம் அல்-ஹாஜ் எம்.எச். முஹம்மதின் புதல்வரும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய நிலையத்தின் தலைவருமான அல்-ஹாஜ் ஹுஸைன் முஹம்மத், மற்றும் முன்னாள் மேல்மாகாண ஆளுநர் மர்ஹும் அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யித் அலவி மௌலானாவின் புதல்வரும் அகில இலங்கை சூபி தரீக்காக்களின் உயர்பீடத்தின் (SCOT) தலைவருமான அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யித் நகீப் மௌலானா ஆகியோர் நியமிக்கப்பட்டிருப்பதாக இஸ்லாமிய ஐக்கியப் பேரவை அறிவித்துள்ளது.

கடந்த மாதம் நடைபெற்ற இஸ்லாமிய ஐக்கியப் பேரவையின் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக பேரவையின் நிர்வாக அதிகாரி பியாஸ் முஹம்மத் தெரிவித்தார்.

இஸ்லாமிய ஐக்கியப் பேரவையில் இலங்கையில் இயங்குகின்ற 29 இஸ்லாமிய அமைப்புக்கள் அங்கம் வகிக்கின்றன.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...