உயர்தர பரீட்சை நிலையங்களில் வெளிச்செயற்பாடுகளை நிறுத்துமாறு வேண்டுகோள்!

Date:

இடம்பெற்றுக்கொண்டிருக்கும் க.பொ.த உயர்தர பரீட்சை நிலையங்களில் வெளிச் செயற்பாடுகளை நிறுத்துமாறு பரீட்சைத் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் 2302 பரீட்சை நிலையங்களில் 04ஆம் திகதி தொடக்கம்
31ஆம் திகதி வரை உயர்தர பரீட்சைகள் நடைபெற ஏற்பாடுகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பரீட்சை நடைபெறும் இக்காலப்பகுதியில் பரீட்சார்த்திகளுக்கு இடைஞ்சல் ஏற்படும் விதமான எவ்வித செயற்பாடுகளையும் பரீட்சை நிலையங்களில் ஏற்பாடு செய்ய வேண்டாம் என அனைத்துத் பாடசாலை அதிபர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் இதற்கு புறம்பாக, பரீட்சை நிலையங்களாக செயற்படும் சில பாடசாலைகளில், பரீட்சார்த்திகளுக்கு இடைஞ்சல் ஏற்படும் விதமாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

எனவே பரீட்சை நிறைவுறும் வரை  இடைஞ்சல் ஏற்படும்
விதமாக எவ்வித செயற்பாடுகளையும் பரீட்சை நிலையங்களில் நடாத்த
வேண்டாம் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...