சனத் நிஷாந்தவுக்குப் பதிலாக ஜகத் பிரியங்கர!

Date:

சனத் நிஷாந்தவின் மரணத்தை தொடர்ந்து ஏற்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு ஜகத் பிரியங்கர நியமிக்கப்பட்டுள்ளார்.

2020 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன புத்தளம் மாவட்டத்தில் 5 ஆசனங்களை பெற்றுக்கொண்டது. இதில் சனத் நிஷாந்த 80,082 வாக்குகளைப் பெற்று மாவட்டத்தில் முதல் இடத்தை பிடித்தார்.

ஏனைய நான்கு ஆசனங்களை பிரியங்கர ஜயரத்ன, அருந்திக பெர்னாண்டோ, அமல் மாயாதுன்ன மற்றும் அசோக பிரியந்த ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இந்த பட்டியலில் ஜகத் பிரியங்கர 40,527 வாக்குகளை பெற்று ஆறாவது இடத்தை பெற்றார்.

இதன்படி, சனத் நிஷாந்தவின் மறைவுக்கு பின்னர் வெற்றிடமான சபை உறுப்பினர் பதவி ஜகத் பிரியங்கரவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று (30) வெளியிடப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

Popular

More like this
Related

முதல் மனைவியின் சம்மதமின்றி 2வது திருமணம் செய்ய முடியாது: கேரள உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கேரளா மாநிலத்தில் நடந்த வழக்கு ஒன்றில் நீதிபதிகள் வழங்கிய உத்தரவானது பலரது...

உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து அனுமதி அட்டைகளும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக...

டிரம்ப் உருவாக்கிய நகரமே, அவரைத் தோற்கடிக்கும்: மம்தானியின் வெற்றி உரை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, அவரால் உருவாக்கப்பட்ட நகரமே தோற்கடிக்கும் என்று...

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...