ஜெரோம் பெர்னாண்டோவுக்கு பிணை: வெளிநாடு செல்ல தடை

Date:

மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோ கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். எவ்வாறாயினும் அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோ கடந்த மே மாதம் பிற மதங்கள் குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளாகியிருந்தார்.

இதன்படி, குறித்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 20 ஆம் திகதி உயர்நீதிமன்ற நீதிபதி ஆதித்யா பட்டபெந்தி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் இன்று ஒத்திவைக்கப்பட்டது.

மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின்கருத்துகளின் காணொளி காட்சிகள் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியிருந்தன.

இதனை தொடர்ந்து, மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோ தமது சர்ச்சைக்குரிய கருத்துக்கு மன்னிப்பு கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...