தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரானார் சி.சிறீதரன்!

Date:

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு இன்று காலை திருகோணமலையில் இடம்பெற்றிருந்தது.

வாக்கெடுப்புகள் நிறைவு பெற்றிருந்த நிலையில், சற்று முன்னர் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் சிறிதரனுக்கு ஆதரவாக 186 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன. சுமந்திரன எம்.பிக்கு 137 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தத.

இதன்படி 50 மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தமிழரசு கட்சியின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

மொத்தம் 321 வாக்குகள் பதிவுசெய்யப்பட்டிருந்தன. இதில் கட்சியின் தற்போதைய தலைவரான மாவை சேனாதிராஜா நடுநிலை வகித்துள்ளார்.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேர் வாக்கெடுப்பை புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...