துறைமுக அதிகாரசபை ஏற்பாட்டில் 50 எம்.பிகள் கப்பலில் இன்ப சுற்றுலா!

Date:

துறைமுக அதிகாரசபையின் இரண்டு சிறிய கப்பல்களில் 50க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு துறைமுகத்தில் உல்லாச சுற்றுலா ஒன்றில் ஈடுபட்டிருந்ததாக தெரிய வருகிறது.

துறைமுக இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவின் வேண்டுகோளுக்கு இணங்க ஒதுக்கப்பட்ட இரண்டு கப்பல்கள் மூலம் இந்த இன்ப சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த குழுவிற்கு உணவு மற்றும் ஏனைய பானங்கள் துறைமுக அதிகாரசபையால் வழங்கப்பட்டுள்ளன.

புத்தாண்டின் ஆரம்பத்தை முன்னிட்டு அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொழும்பு துறைமுக வளாகத்தில் ஒரு குறுகிய கப்பல் சுற்றுப் பயணத்தை ஏற்பாடு செய்திருப்பதாகவும் அதில் பங்கேற்குமாறும் துறைமுக இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர விடுத்திருந்த அழைப்பு கடிதத்தின் பிரகாரம் இந்த எம்.பிகள் கலந்துகொண்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

மூலம்: இணையம்

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...