நிகழ்நிலை காப்புச் சட்டத்துக்கு பாராளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு!

Date:

பாராளுமன்றத்தில் இன்று 23ஆம் திகதியும் நாளை 24ஆம் திகதியும் நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் (online safety bill) இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெறுகிறது.

அரசாங்கம் இந்தச் சட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றி இலங்கையில் செயல்படும் இணைய ஊடகங்களை கட்டுப்படுத்த முற்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளன.

இந்நிலையில், விவாதத்தை நடத்தக்கூடாதென எதிர்க்கட்சிகள் விவாதத்தை நடத்துவதா? இல்லையா? என வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்தன. அதன் பிரகாரம் சபாநாயகரால் வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன் பிரகாரம் விவாதத்தை தொடர்ந்து நடத்த ஆளுங்கட்சி ஆதரவாக வாக்களித்ததுடன், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் எதிராக வாக்களித்தன.

விவாதத்தை நடத்த ஆதரவாக 83 வாக்குகளும் எதிராக 50 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்ததுடன், ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிராக வாக்களின.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...