பாகிஸ்தானில் அவசர பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு

Date:

பாகிஸ்தானில் ஈரான் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதல்களை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் போர் மூண்டுள்ளது.

இஸ்ரேல் – காசா போருக்கு மத்தியில் பாகிஸ்தான் – ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் காரணமாக மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானில் அவசரக் பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தை நடத்த அந்நாட்டு பிரதமர் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார்.

ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, 2 நாட்களின் பின்னர் நேற்று சிஸ்தான், பலூசிஸ்தான் மாகாணத்தில் ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மூலம் துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது. இதில், 4 குழந்தைகள் உள்பட 9 போ் உயிரிழந்தனா்.

ஈரானின் சிஸ்தான்-பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள பலூசிஸ்தான் விடுதலை இராணுவம், பலூசிஸ்தான் விடுதலை முன்னணி ஆகிய இரு  அமைப்புகளின் மறைவிடங்கள் மீது பாகிஸ்தான் துல்லியத் தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதலில் ஈரான் நாட்டைச் சாராத 9 போ் உயிரிழந்ததாக மாகாண துணை ஆளுநா் அலிரேசா மா்கதி தெரிவித்துள்ளாா். இந்த சம்பவத்துக்கு ஈரான் வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் செயல்படும் ஜெய்ஷ் அல்-ஆதில் என்ற சன்னி பிரிவு அமைப்பின் நிலைகள் மீது ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் கடந்த செவ்வாய்க்கிழமை ஈரான் தாக்குதல் நடத்தியது.

தங்கள் நாட்டு வான்வெளி எல்லைக்குள் அத்துமீறி ஈரான் தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டிய பாகிஸ்தான், ஈரானுக்கான தனது நாட்டு தூதரைத் திருப்பப் பெற்றது.

பாகிஸ்தானுக்கான ஈரான் தூதா், தன்னுடைய நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவா் திரும்ப வர வேண்டாம் என பாகிஸ்தான் அறிவித்தது.

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் பலஸ்தீனா்களுக்கு ஆதரவு தெரிவித்து, ஈரான் ஆதரவு ஹூதி கிளா்ச்சியாா்கள் செங்கடல் பகுதியில் பயணிக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனா். இதனால், மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது.

ஈரானில் அண்மையில் நடைபெற்ற இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு பிறகு, ஈராக், சிரியாவைத் தொடா்ந்து பாகிஸ்தானிலும் ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக, பாகிஸ்தானும் ஈரான் மீது நடத்திய துல்லியத் தாக்குதல் புதிய பிரச்னையை எழுப்பியுள்ளது.

இதற்கிடையில், ஈரானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதல்களால் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதட்டங்கள் குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளது. அனைத்து தரப்பினரும் நிதானமாக செயல்பட வேண்டுமென அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

 

 

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...