பிரித்தானியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 75 வருட இராஜதந்திர உறவுகளை முன்னிட்டு நடத்தப்படும் நிகழ்வுகளின் ஒரு பகுதியாக பிரித்தானிய இளவரசி ஹேன் நாளை (புதன்கிழமை) நாட்டுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இதன்போது இளவரசி ஹேனுடனான இந்த விஜயத்தில் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சர் திமோதி லாரன்ஸும் கலந்துகொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது இளவரசி கண்டி மற்றும் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார்.
மேலும், அவர் நாட்டில் இருக்கும் காலக்கட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட அரசியல் தலைவர்களையும் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.