வரி எண் பதிவு கட்டாயம்; அபராதத் தொகை இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை: நிதி இராஜாங்க அமைச்சர்

Date:

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரி எண்களை பதிவு செய்வது கட்டாயம் என்றாலும், இன்னும் ரூ.50,000 அபராதம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இன்று ருவன்வெல்ல பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தைப் பெற்றுக் கொள்ளாவிட்டால் ரூ.50,000 ரூபா அபராதம் விதிக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்திருந்தது.

ஆனால் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நபர்களுக்கும் வரி இலக்கம் பெறுவது கட்டாயமானாலும், அதனை பின்பற்றாதவர்களிடம் இருந்து ரூ.50000 அபராதம் விதிக்க சட்ட ஏற்பாடு இருந்தாலும், அது தற்போதைக்கு நடைமுறைப்படுத்தப்படாது என அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் நாட்டு மக்களை ஒடுக்குவதற்கு எதிர்பார்க்கவில்லை என தெரிவித்தார்.

வரிக் கோப்பினைத் திறந்து இலக்கத்தைப் பெறுவது கட்டாயம். ஆனாலும், அந்த மக்கள் அனைவரும் வரி செலுத்த வேண்டும் என்பதில்லை என்று மீண்டும் வலியுறுத்திய அமைச்சர், தற்போது மாதத்திற்கு 100,000 ரூபாய் நிகர வரி வருமானம் உள்ளவர்கள் மட்டுமே செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...