அமெரிக்காவின் கப்பல்களை அழிப்போம்: புதிய அறிவிப்பை வெளியிட்ட ஹவூதிகள்

Date:

செங்கடலில் ஹவூதிகள் கிளர்ச்சியாளர்களின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதால் அதன் ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஹூவுதிகள் எச்சரித்துள்ளனர்.

யேமனின் ஈரானுடன் இணைந்த ஹவூதிகள்  செங்கடலில் உள்ள அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் போர்க் கப்பல்களைத் தொடர்ந்து குறிவைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

ஹவூதி கிளர்ச்சியாளர்கள் குழுவின் இராணுவ செய்தித் தொடர்பாளர், அல்-மஸ்சிரா தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமெரிக்க போர்க்கப்பலான யுஎஸ்எஸ் கிரேவ்லி (USS Gravely) மீது ஹவூதிகள் நடத்திய ஏவுகணை தாக்குதலை தடுத்து நிறுத்தியதாக செங்கடலில் உள்ள அமெரிக்க பாதுகாப்பு இராணுவம் தெரிவித்துள்ளது.

யேமனின் அதிக மக்கள்தொகை கொண்ட பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹவூதிகள் , காசா போரில் பலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக செங்கடல் மற்றும் அதன் ஊடாக பயணிக்கும் கப்பல்களைத் தாக்கி வருகின்றனர்.

யேமனில் உள்ள ஹவூதிகள் இலக்குகள் மீது அமெரிக்காவும் பிரித்தானியாவும் தாக்குதல்களை நடத்தி வருவதுடன், ஹவூதிகள் கிளர்ச்சியாளர்களை பயங்கரவாதிகளாகவும் அறிவித்துள்ளனர்.

ஹவூதிகள் கிளர்ச்சியாளர்களின் அறிவிப்பால் செங்கடலில் எதிர்வரும் நாட்களில் பதற்றம் அதிகரிக்கும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...