இன்னும் 500 பேருக்கு ஹஜ் வாய்ப்பு: திணைக்களம் தெரிவிப்பு

Date:

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், இலங்கை ஹஜ் குழுவுடன் இணைந்து 2024 ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையினை நிறைவேற்ற உத்தேசித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோரியிருந்தது.

அதற்கமைய இந்த ஆண்டு 3500 வீசாக்கள் கிடைக்கப்பெற்றதுடன் இந்த வீசாக்களை 2024 ஏப்ரல் மாதத்திற்குள் பூரணப்படுத்துமாறு சவூதி அரசு இலங்கை ஹஜ் குழுவை பணித்துள்ளது.

இதனடிப்படையில் இதுவரை 3000 பேர் திணைக்களத்தில் பதிவு செய்துள்ளனர்.
இன்னும் 500 பேருக்கான பதிவே எஞ்சியுள்ளதால் 2024 ஆம் ஆண்டு ஹஜ் கடமையினை நிறைவேற்ற உத்தேசித்துள்ளவர்கள் உடனடியாக தங்களது பதிவை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள இணையத்தளத்தினூடாக (online) மூலம் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

Popular

More like this
Related

மன்னிப்பின் உயரிய முன்மாதிரி: சவூதியில் மரண தண்டனையை எதிர்நோக்கும் அனோஜனுக்கு இராஜதந்திர வழியில் மன்னிப்பு பெறக் கோரிக்கை!

தனது வாழ்நாளில் தனக்கு சொல்லொணாத் துயரங்களையும் அவமானங்களையும் ஏற்படுத்தியவர்களைக்கூட மன்னித்தவர் முஹம்மது...

சவூதி மரண தண்டனையிலிருந்து மகனைக் காப்பாற்றுமாறு ஜனாதிபதியிடம் அனோஜனின் தாயார் வேண்டுகோள்!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இலங்கை புலம்பெயர் தொழிலாளி...

சவூதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: அரசாங்கம் உடனடியாக தலையிட சாணக்கியன் எம்.பி அவசர கோரிக்கை!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இலங்கை இளைஞர் சிவராசா...

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளதாக இலங்கை வாகன...