இன்னும் 500 பேருக்கு ஹஜ் வாய்ப்பு: திணைக்களம் தெரிவிப்பு

Date:

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், இலங்கை ஹஜ் குழுவுடன் இணைந்து 2024 ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையினை நிறைவேற்ற உத்தேசித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோரியிருந்தது.

அதற்கமைய இந்த ஆண்டு 3500 வீசாக்கள் கிடைக்கப்பெற்றதுடன் இந்த வீசாக்களை 2024 ஏப்ரல் மாதத்திற்குள் பூரணப்படுத்துமாறு சவூதி அரசு இலங்கை ஹஜ் குழுவை பணித்துள்ளது.

இதனடிப்படையில் இதுவரை 3000 பேர் திணைக்களத்தில் பதிவு செய்துள்ளனர்.
இன்னும் 500 பேருக்கான பதிவே எஞ்சியுள்ளதால் 2024 ஆம் ஆண்டு ஹஜ் கடமையினை நிறைவேற்ற உத்தேசித்துள்ளவர்கள் உடனடியாக தங்களது பதிவை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள இணையத்தளத்தினூடாக (online) மூலம் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நமல் ராஜபக்ஷ வாழ்த்து!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும்,...