இலங்கையில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் IIT Madras!

Date:

இந்தியாவின் முதன்மையான பொறியியல் கல்லூரிகளில் ஒன்றான இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT Madras) இந்த ஆண்டு இலங்கையின் கண்டியில் தமது கிளை வளாகத்தைத் திறக்க உள்ளது.

வெளிநாடுகளில் IIT யின் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக இந்த செயல்பாடு இருக்கும். புதிய வளாகத்திற்கான முன்மொழிவு கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்றதுடன், இதற்கான நிதி ஒதுக்கீடுகளும் இடம்பெற்றுள்ளன.

ஐஐடி தமது கல்வியாளர்கள் குழுவை விரைவில் இலங்கைக்கு அனுப்ப உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

வளாகத்தை அமைப்பது தொடர்பான கலந்துரையாடலுக்காக அடுத்த மாதம் ஐஐடி இலங்கை வரவுள்ளது. இதற்கு முன்னர் இலங்கைப் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு செல்ல உள்ளனர்.

இலங்கை விஜயத்தில் ஐஐடி குழுபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு (யுஜிசி) அதன் பாடநெறிகள் குறித்து விளக்கமளிக்கும். அதன் பின்னர் கண்டி கிளை வளாகத்தை நிறுவுவதற்கான செயல்முறையைத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...