கிரிக்கெட் சபை விவகாரம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபக் குழு தனது அறிக்கையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று கையளித்துள்ளது.
அறிக்கையின் பரிந்துரைகளை அமுல்படுத்த உத்தேசித்துள்ளதாகவும், அறிக்கை மற்றும் புதிய விளையாட்டு சட்ட வரைவு இரண்டும் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
2023 ஆம் ஆண்டு நவம்பர் 06ஆம் திகதி, ஜனாதிபதி விக்ரமசிங்க, அமைச்சர் அலி சப்ரி தலைமையில், அமைச்சர்களான திரன் அலஸ், மனுஷ நாணயக்கார மற்றும் கஞ்சன விஜேசேகர ஆகியோரைக் கொண்ட நான்கு பேர் கொண்ட குழுவொன்றை நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.