இஸ்லாமிய ஐக்கியப் பேரவையின் சிரேஷ்ட ஆலோசகர்களாக ஹுஸைன் முஹம்மத் மற்றும் நகீப் மௌலானா நியமனம்!

Date:

இலங்கையில் இயங்கும் இஸ்லாமிய அமைப்புக்களை ஒரே குடையின் கீழ் இணைப்பதற்கான இஸ்லாமிய ஐக்கியப் பேரவையின் சிரேஷ்ட ஆலோசகர்களாக முன்னாள் சபாநாயகர் மர்ஹூம் அல்-ஹாஜ் எம்.எச். முஹம்மதின் புதல்வரும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய நிலையத்தின் தலைவருமான அல்-ஹாஜ் ஹுஸைன் முஹம்மத், மற்றும் முன்னாள் மேல்மாகாண ஆளுநர் மர்ஹும் அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யித் அலவி மௌலானாவின் புதல்வரும் அகில இலங்கை சூபி தரீக்காக்களின் உயர்பீடத்தின் (SCOT) தலைவருமான அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யித் நகீப் மௌலானா ஆகியோர் நியமிக்கப்பட்டிருப்பதாக இஸ்லாமிய ஐக்கியப் பேரவை அறிவித்துள்ளது.

கடந்த மாதம் நடைபெற்ற இஸ்லாமிய ஐக்கியப் பேரவையின் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக பேரவையின் நிர்வாக அதிகாரி பியாஸ் முஹம்மத் தெரிவித்தார்.

இஸ்லாமிய ஐக்கியப் பேரவையில் இலங்கையில் இயங்குகின்ற 29 இஸ்லாமிய அமைப்புக்கள் அங்கம் வகிக்கின்றன.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...