எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு

Date:

இன்று காலை 5 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிபேட்கோ அறிவித்துள்ளது.

ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீட்டர் 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை – 366 ரூபா.

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் ஒரு லீட்டர் 38 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை – 464 ரூபா.

ஒட்டோ டீசல் ஒரு லீட்டர் 29 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை – 358 ரூபா. சுப்பர் டீசல் ஒரு லீட்டர் 41 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை – 475 ரூபா. .ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் 11 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை – 236 ரூபா.

இதேவேளை நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில்  நேற்று நீண்ட வரிசையில் காத்திருந்து பொது மக்கள் தமது வாகனங்களுக்கு எரிபொருளை நிரப்பிச் சென்றதை காணமுடிந்தது. ஜனவரி முதலாம் திகதி முதல் வற் வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...