ஐக்கிய மக்கள் சக்தியின் மாபெரும் போராட்டம் ஆரம்பம்

Date:

ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், நாட்டு மக்கள் மீதான பொருளாதார அழுத்தத்தை குறைக்கவும், மக்கள் சுதந்திரமாக வாழவும் அரசாங்கத்தை வலியுறுத்தி  ஐக்கிய மக்கள் சக்தி  ஏற்பாடு செய்த போராட்டம் சில நிமிடங்களுக்கு முன்னர் கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் ஆரம்பமானது.

“2024, ஒரு மாற்றத்தை உருவாக்கும் ஆண்டு” என்ற தலைப்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள்,  அமைப்பாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், சமகி ஜனபலவேகவின் அனைத்து மகளிர் மற்றும் இளைஞர் கிளைகளின் பிரதிநிதிகள் உட்பட பெருந்திரளான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

விவசாயிகள், மீனவர்கள், அரசு ஊழியர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி ஆர்வலர்கள் என ஏராளமானோர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...