கட்டட இடிபாடுகளுக்கு மத்தியில் தனது மகளின் பிறந்த நாளை கொண்டாடிய பலஸ்தீன ஊடகவியலாளர்

Date:

பலஸ்தீன பத்திரிகையாளரான முகமது ஆசாத் என்பவர் காசா பகுதியில் இடிந்த வீடுகளின் இடிபாடுகளுக்கு மத்தியில் தனது மகளின் பிறந்தநாளை கொண்டாடிய சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களில் அதிகம் விரும்பப்படும் காணொளியாக மாறியுள்ளது.

இந்த வீடியோவில் 6ஆவது பிறந்தநாளை நினைவு கூறும் வகையில் தனது மகளுக்கு ஒரு சிறந்த பொம்மை பரிசை வழங்கினார். அப்போது அந்த குழந்தை இந்த போர் முடிவடைந்து மீண்டும் பாடசாலைக்கு செல்லவேண்டும் என தனது ஆசையை  கூறுகிறார்.

காசாவில் விமானக்குண்டு வீச்சினால் தரைமட்டமான தனது வீட்டின் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ள தனது  பிள்ளைக்கு பரிசுகொடுத்து வாழ்த்தும் இந்த தந்தையின் காணொளி தற்போது இணையத்தில் அதிகமாக வைரலாகியுள்ளது.

அழக்கூட தெரியாத மழலைகள் மீது அணுகுண்டு விழுகின்றது, அடுத்த தலைமுறை சீரழித்து அழித்து குழந்தைகள் விழுவதை எந்த மனமும் விரும்பாது.

Popular

More like this
Related

ஜம்இய்யதுல் உலமாவின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக அஷ்ஷெய்க் வை.எல்.எம். நவவி நியமனம்

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக அஷ்ஷெய்க் வை.எல்.எம்....

கஞ்சிப்பானி இம்ரானின் சகாக்கள் இன்று நாட்டிற்கு

மலேசியாவில் கைதுசெய்யப்பட்ட பிரபல பாதாள குழு செயற்பாட்டாளர்களாக கருதப்படும் மூவர் இன்று...

சாகர காரியவசம் குற்ற விசாரணைப் பிரிவால் கைது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச் செயலாளரான சட்டத்தரணி சாகர காரியவசம்...