கப்சோவினால் சமூக ஊடக ஆர்வலர்களுக்கான பயிற்சிப் பட்டறை ஆரம்பம்!

Date:

அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலக பிரிவுகளையும் உள்ளடக்கியதாக கப்சோ நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் “Youth Media Project” வேலைத்திட்டம் கடந்த வெள்ளியன்று (26) கப்ஸோ நிறுவனத்தின் திட்டப்பணிப்பாளர் ஏ.ஜே காமில் இம்டாட் தலைமையில் காரைதீவு பிரதேசத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

GCERF ,HELVETAS நிதியுதவியுடன் GAFSO நிறுவனத்தின் அமுல்படுத்தலில் செயற்படுத்தப்படும் HOPE OF YOUTH வேலைத்திட்டத்தின் கீழ் Youth Media Project ஆனது இடம்பெற்று வருகின்றது.

இவ் வேலைத்திட்டமான அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட 30 சமூக ஊடக ஆர்வலர்களை கொண்டு இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

மேலும் இவ் வேலைத்திட்டமானது ஒரு வருட காலமாக இடம்பெறவுள்ளதுடன் இந் நிகழ்வுகளுக்கு வளவாளராக 27ம் ,28ம் திகதிகளில் விடியல் இணையத்தளத்தின் பிரதம ஆசிரியர் றிப்தி அலி கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட சமூக ஊடக ஆர்வலர்களுக்கு “Digital Story Telling ” சம்பந்தமான தெளிவினை வழங்கியிருந்தார்.

(ஏ. கே. ஹஷான் அஹமட்)

Popular

More like this
Related

சிறுவர்களின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யப் புதிய கொள்கை!

சிறுவர்கள் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்களை மேற்பார்வையின்றிப் பயன்படுத்துவதால் ஏற்படும்...

தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு: காங்கிரஸ் விதித்த நிபந்தனை!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவளித்துள்ள காங்கிரஸ், அக்கட்சிக்கு ஒரேவொரு...

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

டெங்கு அபாயம் அதிகமுள்ள வலயங்களை இலக்காகக் கொண்டு இன்று (06) விசேட...

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான விண்ணப்பங்கள் மே 19 வரை நீடிப்பு

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக பிரவேசத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மே மாதம்...