காசாவில் போர் நிறுத்தம்: பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்!

Date:

எகிப்து, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த உளவுத்துறை அதிகாரிகளுக்கு இடையே வார இறுதியில் இடம்பெற்ற சந்திப்பில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டதாக கட்டார் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ்க்கு இடையேயான போர்நிறுத்தம் மற்றும் காசாவில் பலஸ்தீனிய குழுக்களால் சிறை பிடிக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்கான சாத்தியமான ஒப்பந்தம் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் தொடங்கியதில் இருந்து மோதலை நிறுத்துவதற்கான ஒப்பந்தங்கள் குறித்த பேச்சுவார்த்தைகளை குறித்த தரப்பினர் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வார இறுதியில் மூன்று நாடுகளின் உளவுத் தலைவர்கள் சந்திப்பை மேற்கொண்டதாக கட்டார் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளை முதலில் விடுவிப்பது மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக போர்நிறுத்ததை அமுல்படுத்துவது குறித்து இந்த சந்திப்பில் பேசப்பட்டதாக கட்டார் பிரதமர் கூறியுள்ளார்.

இதேநேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு முன்நிபந்தனையாக நிரந்தர போர் நிறுத்தத்தை ஹமாஸ் கோரியதாகவும் கட்டார் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...