சர்வதேச தரத்திற்கு அமையவே சட்டத்திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன!

Date:

இலங்கையில் நீதி செயற்பாட்டை வலுப்படுத்துவதற்காகவே சர்வதேச தரத்திற்கு அமைய  புதிய சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் கொண்டு வரப்படுவதாக நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் Marc-Andre-Francheசிடம் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளருக்கும், நீதியமைச்சருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று (19) நீதியமைச்சில் நடைபெற்றது.

உலக நாடுகளில் நீதி செயற்பாட்டை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவின் அனுபவங்கள் சம்பந்தமாகவும் இணைப்பாளர், நீதியமைச்சருடன் கருத்துக்களை பரிமாறிக்கொண்டுள்ளார்.

எதிர்காலத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளதாகவும் சட்டத்தின் ஆதிபத்தியத்தை உறுதிப்படுத்த இலங்கை எடுக்கும் முயற்சியில், ஐக்கிய நாடுகள் அமைப்பின் வழிக்காட்டல்கள் மிகவும் முக்கியம் என அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...