சர்வதேச தரத்திற்கு அமையவே சட்டத்திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன!

Date:

இலங்கையில் நீதி செயற்பாட்டை வலுப்படுத்துவதற்காகவே சர்வதேச தரத்திற்கு அமைய  புதிய சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் கொண்டு வரப்படுவதாக நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் Marc-Andre-Francheசிடம் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளருக்கும், நீதியமைச்சருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று (19) நீதியமைச்சில் நடைபெற்றது.

உலக நாடுகளில் நீதி செயற்பாட்டை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவின் அனுபவங்கள் சம்பந்தமாகவும் இணைப்பாளர், நீதியமைச்சருடன் கருத்துக்களை பரிமாறிக்கொண்டுள்ளார்.

எதிர்காலத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளதாகவும் சட்டத்தின் ஆதிபத்தியத்தை உறுதிப்படுத்த இலங்கை எடுக்கும் முயற்சியில், ஐக்கிய நாடுகள் அமைப்பின் வழிக்காட்டல்கள் மிகவும் முக்கியம் என அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...