சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டும் மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: 24 மணி நேரத்தில் 174 பேர் பலி

Date:

இனப்படுகொலைகளை தவிர்க்குமாறு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டு 24 மணி நேரம் கூட முடிவடையாத நிலையில் இஸ்ரேல் காஸா மீது நேற்று மிக மோசமான தாக்குதலை நடத்தியுள்ளது.

ஹமாஸ் போராளிகளுடன் நடந்து வரும் போரில் மக்களைக் கொல்வதையும், அழிப்பதையும் தவிர்க்கவும், இனப்படுகொலையை தவிர்க்கவும் சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், காஸா மீது இஸ்ரேல் மீண்டும் இந்த கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இஸ்ரேல் படையினரின் தாக்குதல் 24 மணி நேரத்தில் 174 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும் 310 பேர் காயமடைந்ததாகவும் பாலஸ்தீன சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்துள்ளது.

காஸாவின் ரஃபாவில் உள்ள குடியிருப்பு ஒன்றின் மீது நேற்று காலை நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

உலக அமைதி தினம்: உலக பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் சவூதி அரேபியாவின் முயற்சிகள்

எழுத்து: கலித் ஹமூத் அல்-கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அமைதி மதிப்புகளுக்கான...

‘உலக மக்கள் காசா பக்கம் நிற்கும் வரை இஸ்ரேல்-அமெரிக்காவின் சதி நிறைவேறாது”: இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற பேரணி!

சென்னையில் காசாவில் நிலவும் போரினை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, பெரியாரிய உணர்வாளர்கள்...

2025(2026)சாதாரண பரீட்சைக்கான ONLINE விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

2025(2026) ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரணதர பரீட்சைககு தோற்றுவதற்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள்...

இலங்கையில் அதிகரித்துள்ள இணையவழி துஷ்பிரயோகம்!

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும்...