ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகும் மஹிந்தலை தம்மரதன தேரர்!

Date:

”நாட்டின் நலன் கருதி ஜனாதிபதித் தேர்தலுக்கும், பாராளுமன்றத் தேர்தலுக்கும் நாங்கள் தயாராக உள்ளதாக மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் தம்மரதன தேரர் தெரிவித்தார்.

அதேநேரம், நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு தொலைநோக்கு பார்வை இல்லை. எதிர்காலத்தில் ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே அரசியலமைப்பின் கீழ் நாட்டை நடத்த தயாராக உள்ளோம் என்றும் கூறினார்.

‘மிஹிந்தலையில் இருந்து நாட்டை கட்டியெழுப்பும் பாதையை மீள ஆரம்பிப்போம்’ என்ற நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இலங்கை முழுவதிலுமுள்ள பல்வேறு துறைசார்ந்தவர்களை இணைத்து ஒரே அரசியல் கட்சியில் மற்றும் ஒரு சின்னத்தில் போட்டியிட வைக்கும் முனைப்பில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். நாங்கள் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யவில்லை. எனக்காக தியாகம் செய்ய பல அரசியல் கட்சிகள் உள்ளன.

தண்ணீர், மின்சாரம், வரி என அனைத்து பிரச்சினைகளுக்கும் எங்களிடம் தீர்வு உள்ளது. திமிர்பிடித்த ஆட்சியாளர்களை இனியும் தொடர அனுமதிக்க முடியாது. அவர்கள் அனைவரும் சிறையில் இருக்க வேண்டும் அல்லது வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்.

2332 வருடங்களுக்கு முன்னர் மிஹிந்தலையில் இருந்து தேசத்தைக் கட்டியெழுப்பும் பாதை ஆரம்பிக்கப்பட்டது போல் மிஹிந்தலையில் இருந்து மீண்டும் அந்த பயணம் ஆரம்பிக்கப்பட வேண்டும்.” எனவும் அவர் வலியுறுத்தினார்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...