ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் திலித் ஜயவீர: நிறுவன பதவிகளிலிருந்து இராஜினாமா!

Date:

பிரபல தொழிலதிபர் திலித் ஜயவீர, 2024 ஜனவரி 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அவர் தலைவர் மற்றும் நிர்வாக சபை உறுப்பினராக உள்ள அனைத்து நிறுவனங்களிலிருந்தும் இராஜினாமா செய்துள்ளார்.

‘தெரண’ தொலைக்காட்சியை நடத்தி வரும் ‘பவர்ஹவுஸ்’ நிறுவனம், ‘அருண’ நாளிதழை நடத்தி வரும் ‘லிபர்ட்டி பப்ளிஷர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ உள்ளிட்ட 24 நிறுவனங்களில் இருந்து அவர் இராஜினாமா செய்துள்ளார்.

முழு நேர அரசியலில் பிரவேசித்துள்ள திலித் ஜயவீர எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ‘மவ்பிம ஜனதா கட்சியின்’ தலைவராக போட்டியிட தீர்மானித்துள்ளார்.

அதற்கான பிரச்சாரங்களை அவர் நாடு முழுவதும் தீவிரப்படுத்தியுள்ள பின்புலத்திலேயே தாம் வகித்த அனைத்து தலைவர் பதவிகளையும் இராஜினாமா செய்துள்ளார்.

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நமல் ராஜபக்ஷ வாழ்த்து!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும்,...