ஜோர்தானில் இலங்கையர்கள் மீது கொடூரத் தாக்குதல்!

Date:

ஜோர்தானில் சிக்கியுள்ள இலங்கையர்கள் குழு மீது அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பாதுகாப்பு படையினர் இலங்கையர்களை கொடூரமாக தாக்கியதுடன் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோர்தானில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் சுமார் 350 இலங்கையர்கள் சம்பளம் வழங்கப்படாமையால் மோசமான நிலைமைகளை எதிர்கொண்டுள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின.

குறித்த ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் தமக்கு அதிகாரிகள் உரிய சம்பளத்தை வழங்குவதில்லை எனவும், இலங்கைக்கு மீள வருவதற்கு இடமளிப்பதில்லை எனவும் பாதிக்கப்பட்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையிலேயே, ஜோர்தானில் சிக்கியுள்ள இலங்கையர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்கள் மீது அந்நாட்டு படையினர் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கருத்து வெளியிடுகையில், “தமது பிரச்சினையை முழு நாடும் அறிந்துள்ளது. தூதரகத்திற்கும் எல்லா விடயங்களும் தெரியும், சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. நாங்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளோம்.

சாப்பாடு உள்ளிட்டவைகள் சரியாக கிடைக்காமல் தவிக்கின்றோம். இந்நிலையில், எங்களுக்கு மிக விரைவில் தீர்வு ஒன்றை பெற்றுத்தர வேண்டும்” என இலங்கை அரசாங்கத்திடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...