ஜோர்தானில் இலங்கையர்கள் மீது கொடூரத் தாக்குதல்!

Date:

ஜோர்தானில் சிக்கியுள்ள இலங்கையர்கள் குழு மீது அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பாதுகாப்பு படையினர் இலங்கையர்களை கொடூரமாக தாக்கியதுடன் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோர்தானில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் சுமார் 350 இலங்கையர்கள் சம்பளம் வழங்கப்படாமையால் மோசமான நிலைமைகளை எதிர்கொண்டுள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின.

குறித்த ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் தமக்கு அதிகாரிகள் உரிய சம்பளத்தை வழங்குவதில்லை எனவும், இலங்கைக்கு மீள வருவதற்கு இடமளிப்பதில்லை எனவும் பாதிக்கப்பட்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையிலேயே, ஜோர்தானில் சிக்கியுள்ள இலங்கையர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்கள் மீது அந்நாட்டு படையினர் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கருத்து வெளியிடுகையில், “தமது பிரச்சினையை முழு நாடும் அறிந்துள்ளது. தூதரகத்திற்கும் எல்லா விடயங்களும் தெரியும், சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. நாங்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளோம்.

சாப்பாடு உள்ளிட்டவைகள் சரியாக கிடைக்காமல் தவிக்கின்றோம். இந்நிலையில், எங்களுக்கு மிக விரைவில் தீர்வு ஒன்றை பெற்றுத்தர வேண்டும்” என இலங்கை அரசாங்கத்திடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...