தகவல் அறியும் உரிமை சட்டத்தை எவ்வாறு பயன்படுத்துவது தொடர்பில் புத்தளத்தில் மார்ச் 12 இயக்கத்தின் விழிப்புணர்வு நிகழ்வு!

Date:

புத்தளம் மாவட்ட மார்ச் 12 இயக்கத்தின் 35 உறுப்பினர்களுக்கான தகவல் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி திட்டம் கடந்த 2023.12.23 ஆம் திகதி புத்தளம் ரம்யா லங்கா அலுவலகத்தில் இடம்பெற்றது.
சமய வழிபாடுகளுக்கு பின்னர் இடம்பெற்ற இந்நிகழ்வில் மார்ச் 12 இயக்கத்தின் புத்தளம் மாவட்டக் குழுவின் உப தலைவர் திருமதி முஸ்னியா அவர்களினால் நிகழ்ச்சியின் நோக்கம் பற்றியும் அறிமுக உரையொன்றும் நிகழ்த்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சட்டத்தரணி ஜகத் லியன ஆராய்ச்சி (இலங்கை தகவல் அறியும் ஆணைக்குழுவின் ஆணையாளர்) அவர்களினால் போதைப்பொருள் மற்றும் மதுபானங்களைத் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஊடாக தடுக்கும் மற்றும் தகவல் உரிமைச் சட்டத்தின் ஊடாக கட்டுப்படுத்தும் பொறிமுறை பற்றிய கலந்துரையாடலை நடத்தினார்.
தனியொரு கிராம உத்தியோகத்தர் பெரும் சனத்தொகைக்கு (2500 – 3000 குடும்பங்கள்) சேவைகளை வழங்கும்போது ஏற்படும் நிர்வாக மற்றும் வளப் பகிர்வு பிரச்சினைகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி மேற்கொள்ளக்கூடிய அணுகுமுறைகள் குறித்தும் அவர் விளக்கமளித்தார்.
அதன் பின்னர் பார்வையாளர்களுக்கு கேள்விகள் கேட்கும் வாய்ப்பு வழங்கப்பட்டதுடன் மார்ச் 12 இயக்கத்தின் புத்தளம் மாவட்டக் குழுவின் செயலாளர் திருமதி எச்.என்.எஸ்.மல்காந்தி அவர்களின் நன்றியுரையைத் தொடர்ந்து நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
இந்நிகழ்வில் மொத்தம் 35 பேர் வரை கலந்துகொண்டு பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...