தொடர் கனமழை எதிரொலி – சென்னை புத்தகக் கண்காட்சி இன்று ரத்து!

Date:

தொடர் கன மழை காரணமாக சென்னை புத்தகக் கண்காட்சி இன்று (08) ஒருநாள் மட்டும் நடைபெறாது என பபாசி அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் இன்று கனமழை பெய்யும் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் சென்னையில் நேற்று இரவு முதல் நகரின் பல இடங்களில் நல்ல மழை பெய்தது. இந்த நிலையில் இன்று சென்னையில்  முதல் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் கன மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த மழை சமாளிக்கக்கூடிய அளவில்தான் இருக்கப் போகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தொடர் மழை காரணமாக சென்னையில் நடைபெற்று வரும் 47 வது புத்தகக் கண்காட்சி இன்று ஒரு நாள் மட்டும் நடைபெறாது என பபாசி தலைவர் அறிவித்துள்ளார். சென்னையின் 47வது புத்தகக் கண்காட்சி சென்னை நந்தனத்தில் உள்ள YMCA மைதானத்தில் கடந்த மூன்றாம் தேதி துவங்கி 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...