நடிகர் விஜயின் இலங்கை வருகை சுற்றுலாத்துறையை இலவசமாக விளம்பரமடைய வழிவகுக்கும்: ஹரின் பெர்ணான்டோ

Date:

தென்னிந்திய நடிகர் தளபதி விஜய் இலங்கை வருவதன் ஊடாக பல மில்லியன் கணக்கான மக்களுக்கு இலங்கையின் சுற்றுலாத்துறை குறித்து விளம்பரப்படுத்த முடியும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறை அமைச்சில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

”இலங்கையின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க விசேட குழுவொன்றை நியமித்து தென்னிந்திய மற்றும் பொலிவூட் திரைப்படங்களுக்கு இலங்கையில் படிப்பிடிப்புகளை நடத்துமாறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்.

எதிர்காலத்தில் பல இந்திய நடிகர்கள் இலங்கைக்கு வர உள்ளனர். குறிப்பாக தளபதி விஜய், சல்மான் கான் உட்பட பலர் படப்பிடிப்புகளை நடத்த வருகைத்தர உள்ளனர். இவர்கள் தமது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை இட்டால் அது பல மில்லியன் கணக்கான மக்களை சென்றடைகிறது.

பிரபுதேவா உட்பட பலர் இலங்கைக்கு வந்துச் சென்றுள்ளனர். இலங்கையின் சுற்றுலாத்துறை பல்வேறு வழிகளில் எதிர்காலத்தில் ஊக்கமடையும். அதேபோன்று படிப்பிடிப்புகளை நடத்துவதற்கு இலகுவான அனுமதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.” எனவும் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ கூறியுள்ளார்.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...